Subscribe to RSS Feed

கம்பனோடு நான் கலந்த பொழுதுகள் ……(7)

on May 29th, 2009 by sakthi

 கம்பராமாயணத்தில் கம்பன் மிகவும் முக்கியமாக கைக்கொண்டது தனது கதாநாயகன் இராமனின் நாடான கோசலை நாட்டின் வளங்களையும், மக்களையும் பற்றிய வர்ணமையும், விபரிப்புமே ஆகும்.
 
தன்னுடைய கதைக்கு ஏற்ற காட்சிகளை, கருத்துக்களின் ஆழத்தை அழகுறச் சொல்ல வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்தான் கம்பன்.
 
கம்பனின் ஆக்கத்தை, அவனது படைப்புக்களின் வீரியத்தைப் படித்து வியக்காமல் இருக்க முடியாது.
 
கம்பனின் விளக்கங்கள், அதை விளக்குவதற்கு அவன் கையாளும் வழி முறைகள் அனைத்துமே அற்புதமானவை.
 
கம்பனின் கற்பனையில் விரிந்திருந்த இராம ராஜ்ஜியம் எமது சிந்தையை நிறைக்கிறது. தன்னுடைய எண்ணக்கருவறையில் உதிக்கும் [...]

Continue reading about கம்பனோடு நான் கலந்த பொழுதுகள் ……(7) »

Category: இலக்கியத்திடல் | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

அன்னையின் நினைவுகளின் அழகு தினம்

on May 13th, 2009 by sakthi

 அன்னை என்னும்
அன்புத் தெய்வம்
என்னை விட்டுப்
எங்கோ சென்றாலும்
 
அன்றவள் வதனத்தில்
அன்புடன் பொழிந்த
அன்புப் புன்னகை
அகலாது என்னெஞ்சை விட்டு
 
தன் பெற்றோரைப் பாவம்
தான் இளைமையில்
இழந்ததினால் தானோ
தாளாத பாசத்தை
தம்மக்கள் மீது
தாயவள் கொண்டாள்
 
கணமொன்று எம் முகம்
கலங்கக் கண்டாளென்றால்
கலங்கித் துடித்திடும் அவள்
களங்கமிலா அன்பு இதயம்
 
எத்தனையோ இடர் கண்டு
ஏராளம் துயர் கண்டாய்
அத்தனையும் எமக்காக
அம்மா நீ தாங்கிக் கொண்டாய்
 
அம்மா நீ போய்விட்டாய்
ஆண்டவனை நாடிட்டாய்
அவனோடு இருந்து கொண்டால்
அன்பு மக்களை காத்திடலாம்
என்றோ நீ உயிரிழந்தாய்
 
என்னுள்ளமெனும் ஆலயத்தில்
என்றுமே அணையாமல்
எரிகின்றது ஒருவிளக்கு
என் அன்னை உனக்காக
 
அன்னையர்க்கு தினமென்றால்
ஆயுளிருக்கும் வரை
அனைத்து தினங்களுமேயாகும்
ஆயினும் ஒர் தினத்தில்
அன்னை உன் நினைவுகளை
அழகுபடுத்தி பார்த்திருக்கத் தான்
அன்னையர் [...]

Continue reading about அன்னையின் நினைவுகளின் அழகு தினம் »

Category: கவிதை | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

உழைப்பவனே ! உனக்கொரு வாழ்த்து

on April 30th, 2009 by sakthi

அன்புத் தோழனே !
வருடங்கள் தானாய் ஓடுது
கோஷங்கள் வானைப் பிளக்குது
உழைப்பது நீதான் - ஆனால்
உயர்வது நீயா ?
வறுமையே உந்தன்
வாழ்க்கையின்
தாரக மந்திரமாய்
நீயும்
வானுயர மாளிகைகளைக்
கட்டிக் கொண்டே ……..
குளிரூட்டிய அறையினுள்
சுழலும் நாற்காலியில்
உனக்காக சாசனம் எழுதுகிறார்கள்
உன்னுடைய முதலாளிகள்
நடுத்தரம், மேல்தரம்
கீழ்த்த்ரம் என்றே வர்க்கங்கள்….
கேட்க காதுகளுக்கு இனிமையாய்
மேடைகளிலே பேசும் தலைவர்கள்..
ஆனால்….
கைவண்டி இழுத்த கைகளில்
கறுப்பு மையைப் பூசி
வாக்களித்து
தலைவர்களை இரும்புக் கோட்டைக்கு
தயங்காமல் அனுப்புகிறாய்…..
உன்
வியர்வையைத் தம்மீது
தெளிக்கும் பன்னீராய் அவர்கள்
மாற்றும் யுத்திக்குப் பெயர்தான்
அரசியலாம்…..
பரவாயில்லைத் தோழனே
உன் வியர்வை அவர்களுக்காவது
சந்தனமாகட்டும்
நீ ஓடிக்கொண்டேயிரு
உன் கால்களில் இருக்கும்
செருப்புகள் தேய்ந்து போகும் வரை
ஓடிக் கொண்டேயிரு……
ஏனேனில் உலகம் சுற்றுவதும்
நிற்கப் போவதில்லை
வியாபாரிகள் அரசியல்வாதிகள்
ஆவதும் [...]

Continue reading about உழைப்பவனே ! உனக்கொரு வாழ்த்து »

Category: Uncategorized | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

எந்த மே ! கொஞ்சம் சொல்லும்

on April 30th, 2009 by sakthi

எந்த மே ! கொஞ்சம் சொல்லும்
நெஞ்சம் ஏழ்மையில் உறவாடுமே
வியர்வை நெற்றியில் வழிந்தோடுமே
கைகள் தீரமாய் வளைந்தாடுமே
உலகம் அவருழைப்பால் மகிழ்ந்தாடுமே
காலம் அவர்களைப் பந்தாடுமே
அரசியல் அவர்களால் அரங்கேறுமே
உலகம் முழுவதும் அலைபாயுமே
உறுதியில் அவரினம் கல்லாகுமே
பரம்பரை முழுவதும் போராட்டமே
பசிக்களை அவர்களின் வாழ்வோட்டமே
சொத்துக்கள் அவர்களின் முகவாட்டமே - அவர்
காண்பது வாழ்வினில் சோகமூட்டமே
அகிலம் அவருழைப்பால் செழிப்பாகுமே
இல்லாமை அவர்களின் இருப்பாகுமே
மேதினம் என்பது வெறும் கூப்பாடாமே
எத்தினம் அவர் வாழ்வு விடிவாகுமே
உழைப்பவர் தினம் உலகில் மே
உலகினர் விடுமுறை அடைவது மே
உழைப்பவர் கண்ணீர் தீர்க்குமோ மே
கொஞ்சம் சொல்லும் அது எந்த மே

Continue reading about எந்த மே ! கொஞ்சம் சொல்லும் »

Category: கவிதை | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

வட்டத்தின் வடிவங்கள்

on April 30th, 2009 by sakthi

சித்திரைத் திங்களில்
முத்திரை பதித்தொரு
நித்திரை மறந்திடும்
இத்தரை தந்த உறவிது
புத்தகம் படித்தொரு
மெத்தகு இலக்கியம்
வித்தக வழியினில்
சொத்தெனக் கொண்டே
இச்சம் கொள் தமிழ்
மிச்சம் இன்றி என்
கச்சம் பிடிக்கும் ஒரு
அச்சம் கொள்வகை
சுற்றிய உலகினில்
பற்றிய ஆசைகள்
வற்றிய பின்பு எமைத்
தொற்றிடும் ஞானங்கள்
இத்தனை காலமும்
எத்தனை மனதினை
கொட்டின சொற்களால்
கொத்திய நாவிது
பட்டதும் வாழ்க்கையில்
சுட்டதும் அறிந்திடும்
விட்டதும் புரிந்திடும்
வட்டத்தின் வடிவங்கள்

Continue reading about வட்டத்தின் வடிவங்கள் »

Category: கவிதை | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

அன்பு ஊற்று

on April 30th, 2009 by sakthi

உள்ளமெங்கும் ஆனந்த
வெள்ளம்
பள்ளம் தேடிப் பாயும்
எண்ணம்
என்னுள் விளையும்
அறியா உணர்வுகள்
என்னை எனக்கே
காட்டும் அழகு
முன்னம் ஒருநாள்
தொலைத்த கணங்கள்
இன்றைய வானில்
முழுநிலவாய்
உலகம் எதோ
உருள்வது உருள்வதுதான்
உள்ளே எங்கள்
உதாவக் கொள்கைகள்
மறையும் பொழுதுகள்
எடுத்திடும் உயிர்கள்
விடியும் பொழுதுடன்
சிரிக்கும் மழலைகளாய்
வெட்ட வெட்டத் தழைக்கும்
வாழையாம் எம்மினம்
காணப்போவது ஒரு
கண்ணான காலையை
இழப்புக்களின் வலியைத் தாங்கி
இருப்புக்களை காத்திருந்து
திறப்புக்களை கொண்டே நாமும்
திறப்போம் புதிய உலகின்
கதவுகளை
எதையும் தாங்கிடும் இதயம்
வேண்டும் அன்றே அண்ணா
நன்றாய்ச் சொன்னார்
இதயம் தன்னை விரித்து
அன்பெனும் கம்பளத்தை விரித்து
அனைவரும் தியில இடமளிப்போம்
அதுவே எமக்கு மகிச்சி ஊற்று

Continue reading about அன்பு ஊற்று »

Category: கவிதை | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

மனிதனாய் வாழத்தான் ஆசை

on April 26th, 2009 by sakthi

நேசத்தின் வாசத்தில்
நெருக்கத்தின் கூடலில்
மிருகமாய் அல்ல
மனிதனாய் வாழத்தான் ஆசை
நெஞ்சுக்கு நீதியை
மறைத்துக் கொண்டே
நாளைய உலகத்தின்
நலன்களை உதறிவாழும்
உருப்படாக் கூட்டத்தில்
ஒருவனாய் அல்ல
மனிதனாய் வாழத்தான் ஆசை
அழுகின்ற முகங்களில்
ஆறுபோல் ஓடுகின்ற
கண்ணிரைத் துடைத்து
வறுமை இல்லா பூமியில்
வாழுகின்றோம் என்று
பாடிக்கொண்டே எனக்கும்
மனிதனாய் வாழத்தான் ஆசை
உள்ளத்தில் நர்த்தனமாடும்
உருவமில்லா உணர்ச்சிகளை
மாலையாக்கி சூடிக்கொண்டு
உண்மைக்குப் புறம்பாக வாழும்
உன்மத்தரில் ஒருவராய் அல்ல
மனிதனாய் வாழ்த்தான் ஆசை
போராடிப் போராடிக் களைத்து
போதுமிந்த ஆசை என்றே
என்னை புறந்தள்ளை வைத்து
பொய்யனாய் வாழச் சொல்லும்
சமூகத்தின் மத்தியில்
ஏனோ இன்று நானும்
ஒருவனாய் வாழுகின்றேன்
ஆயினும்……….
மனதினுள் ஏனோ இன்னும்
மனிதனாய் வாழத்தான் ஆசை …..

Continue reading about மனிதனாய் வாழத்தான் ஆசை »

Category: கவிதை | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

மெளனமாய் அழுகின்றேன்

on April 26th, 2009 by sakthi

அன்பின் நண்பனே !
மெளனமாய் அழுகின்றேன்
மனதுக்குள் துடிக்கின்றேன்
முனகல்கள் வாய்வரை வந்து
முடிந்து போகின்றன ….
காரணம் கேட்காதே தோழா
காரியங்கள் தான் எந்தன்
காரணங்களுக்கு ஏனோ மூடியிட்டு
முழுதாக அடைத்து விடுகின்றன
வேதனைகளின் விளிம்பிலே
உறவுகளின் விசும்பல் சத்தம்
கேட்காத பொழுதில்லை ஆனாலும்
கேள்விகள் மரணித்து விட்டன
பணம் இருக்கும் மனிதரெல்லாம்
பலகாததூரம் சென்று
பலகதை பேசி அங்கே வாழ்க்கை
படகோட்டும் காலம்
நேற்றைய உழைப்பில்
இன்றைய உணவுக்கே பாவம்
அல்லாடிக் கொண்டிருந்தோர் தான்
அவலத்துள் அழிகின்றார் இன்று
அவர்களின் குரல் கேட்காததினால் தான்
மெளனமாய் அழுகின்றேன் நண்பா
குரலற்ற கும்பலின் உரிமையற்ற வாழ்வின் மீது
குதித்துக் கொண்டே இன்று
அரசியல் நடத்துகின்ற கேவலம்
வேண்டாம் நண்பா ! வேண்டாம்
நீ சொல்வதே [...]

Continue reading about மெளனமாய் அழுகின்றேன் »

Category: கவிதை | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

சுகமும் சுமையும்

on April 26th, 2009 by sakthi

என்னுள்ளே பிறந்து
என்னுள்ளே தவழ்ந்து
என்னுள்ளே புதைந்து
என்னோடு மறைந்து
போகின்ற உண்மைகளே !
உங்களுக்கு யார் கொடுத்தார்
ஆயுள் தண்டனை ?
அடைப்பட்டுக் கிடந்து
துடிக்கின்றீர்களே ….
சுதந்திரமாய் வெளியே
நீங்கள் வந்தால்
துவண்டு விடும் பல உள்ளங்கள்
என்னும் பயம் கொண்டுதானோ
நீங்கள் என்னுள்ளே
உறங்குறீர்கள் ?
சுகமாக இருந்த உங்கள்
பாரம் ஏனோ இப்போ
சுமையாகத் தெரிகிறதே !

Continue reading about சுகமும் சுமையும் »

Category: கவிதை | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

கவியரசரின் கால்களில்

on April 23rd, 2009 by sakthi

 

எனது மனதில் நிலைபெற்றிருக்கும் அன்புக் கவியர்சரின் பிறந்தநாள் நினைவாக அவரது ஆக்கங்கள் சிலவற்றை இங்கே அணிவகுக்கின்றேன்.
 
ரசிப்பீர்கள் என்பது எனது திடமான நம்பிக்கை.
 
காசைவிட எது பெரிது?
 
“தாசியுள வீட்டிலே தவறாத குலமகள்
தான்போய்க் குடியி ருந்தால்
தட்டுகிற கை அங்கு தாசிஎன் றறியுமா
சம்சாரி என்றறியுமா?
நீசரோடு கூடினால் நீதிமான் தன்னையும்
நீசரென் றேயழைப் பார்;
நிகழ்கால நட்பிலே எதிர்காலம் ஒளிவிடும்
நெருங்குமுன அறிய வேண்டும்!
காசு பெரிதல்லநல் நண்பர்பெரி தாமென்று
கருத்தினில் இருத்து வாயே!
கனிவுடைய சிறுகூடற்பட்டியில் வதிகின்ற
கன்னிமலை யரசி துணையே!”
 
-கவியரசர் க்ண்ணதாசன்-
 
தன்னுடைய சிறுகூடற்பட்டி மலையரசித் தாயிடம் தனது மனதில் காசைவிச தனது [...]

Continue reading about கவியரசரின் கால்களில் »

Category: கண்ணதாசனின் நினைவுகளில் | No comments yet, be the first »