Subscribe to RSS Feed

மனிதத்தை இழந்து விடாதிருக்கும் போது

on July 28th, 2010 by sakthi

குத்துவிளக்கு
எரிகிறது
கோவில்மணி ஓசை
கேட்கிறது
கையில் பழத்தட்டுடன்
வெள்ளை வேட்டி சட்டையுடன்
கோவிலுக்குள்
நுழைகிறார் அறிவான
மனிதரவர்
குழிவிழுந்த கண்களுடன்
மருண்ட விழிகளுடன்
பசி வயிற்றைக் கிள்ள
பாவமந்தச் சிறுவனவன்
எட்டி அவர் கையைத் தொட்டு
கையை நீட்டுகிறான் . . .
சே ! எடுடா கையை
தரித்திரப் பயலே !
தீட்டுப் பட்டு
போயிற்றே . . .
சத்தமிட்டவாறே
சன்னதிக்குள் நுழைகிறார்
அவர் பெயரில் அர்ச்சனை
ஆண்டவன் மேலே
அவர் பெயரால் பாலாபிஷேகம் . . .
அதே வாசலில் . . . அதே இடத்தில் . . .
அதே பையன் பசித்த வயிற்றுடன்
ஆண்டவன் கணிளினூடாக வழிவது
அது என்ன பாலா?
இல்லை இறைவன் மனிதனைப்
பார்த்துச் சொரியும்
வெள்ளைக் [...]

Continue reading about மனிதத்தை இழந்து விடாதிருக்கும் போது »

Category: கவிதை | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

நண்பனுக்கொரு மடல்

on July 28th, 2010 by sakthi

அன்பு நண்பா,
பாசத்தின் உச்சியில்
பழகிய நாட்களின்
நேசத்தின் வாசத்தை
நேற்று நான் கண்டேன்
அன்று நாம் தாய்மண்ணில்
ஆடித்திரிந்த நாட்களில்
அன்பன்றி வேறெதுவும்
அனுபவித்திராத வேளைகள்
உன் நெஞ்சில் நம் நட்பின்
உண்மையான ஆழத்தினை
உன்னுடைய நினைவுகளால்
உணர்த்தினாய் நண்பனே !
காலங்கள் தான் கடந்தன
அகவைகள் தான் உருண்டன
ஆயினும் நண்பா நம் நெஞ்சத்தில்
நட்பு மட்டும் தேயவில்லை
இருந்ததைப் பகிர்வதும்
இல்லாதவற்றை மறப்பதும்
எப்போதும் சிரிப்பதும்
எம்முடைய ஆயுதங்கள்
தேவைகளுக்காய் வாழாமல்
வாழ்வதற்கு தேவைகளை
போதுமென்ற மனம் கொண்டு
வாழ்ந்திருந்த நாட்களது
உன்னுடைய சொந்தங்களை
என்னிடம் அனுப்பி வைத்து
உண்மையான நட்பிற்கு
உதாரணங்கள் காட்டி நின்றாய்
அது போதும் நண்பா !
ஆயுளுக்கும் அது போதும்
காணாத போதும் வாழ்வில் நம்
கண்களுக்குள் நிறைந்திருப்போம்
அடுத்தொரு மடலில்.. . . [...]

Continue reading about நண்பனுக்கொரு மடல் »

Category: கவிதை | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

அடித்தது அலாரம்

on July 28th, 2010 by sakthi

மெல்லியதாய் சிவந்த வானம்
சில்லென்ற குளிர்ந்த காற்று
சல சலத்து ஓடும் நதி
சலனமில்லாத மனம்
சிந்தனையில் தெளிவோடு
கூடிய ஞானம்
பரபரப்பில்லாத
அமைதியான நடை
காட்சியைத் தாண்டிப்
பார்க்கும் வெறுமை
சொந்தம் கொண்டாடாத
அலட்சிய சிரிப்பு
எதையுமே கோபத்தோடு
பார்க்காத குளிர்ந்த இதயம்
பச்சைப் பசும் புல்லின் மென்மை
போன்ற தன்மையான நெஞ்சம்
என்னிடம் எனது என்னும்
எண்னம் இல்லாத
சிறுமையில் பெருமை காணும்
சிந்தனைச் சிறப்புடை மனம்
இவைகள் அனைத்தையும்
அடைந்து விட்டேன் என
நினைத்து மகிழ்ந்தபோது
அடித்து அலாரம்
விழித்துக் கொண்டேன் . . . .
சக்தி சக்திதாசன்

Continue reading about அடித்தது அலாரம் »

Category: கவிதை | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

புரியவில்லை

on July 28th, 2010 by sakthi

உன்னைத் தான் கேட்கிறேன்
உண்மையைச் சொல்லிவிடு
என்னைத்தான் நினைத்தாயா ?
என்னையே நீ வெறுத்தாயா
ஓரக் கண் பார்வைகள்
ஓராயிரம் தடவைகள்
என் மீது வீசினாய்
எப்போது மாறினாய் ?
நீ பார்க்கும் வேளைகள்
நான் பாராப் பொழுதுகள்
உனைப் பார்க்கும் போதோ
உன் பார்வை வேறிடம்
கண்ணும் கண்ணும் பேசியது
காதலென்னும் வார்த்தைகள்
காதுகளுக்குள் விழவில்லை
நெஞ்சினிலே பதிந்தன
உனைத் தேடி நான் வரும்
போதெல்லாம் நீயேன்
உன் வீட்டுச் சுவரோடு
கன்னம் வைத்துக் காத்திருந்தாய் ?
கண்ணோடு தொடங்கி எம் உறவு
கண்ணோடு முடிந்தது
ஒன்று மட்டும் புரியவில்லை
நீ என்னை நேசித்தாயா இல்லை
உன் நினைவுகளை நான் சுவாசித்தேனா ?
சக்தி சக்திதாசன்

Continue reading about புரியவில்லை »

Category: கவிதை | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

புரிந்திருக்கும் கதை ஒன்று

on July 28th, 2010 by sakthi

சரிந்திருக்கும் மரமொன்று
அதிலே
விரிந்திருக்கும் இலையொன்று
முறிந்திருக்கும் கிளையொன்று
அதிலே
முகிழ்த்திருக்கும் மலரொன்று
எரிந்திருக்கும் விறகொன்று
அதிலே
புகைந்திருக்கும் தணலொன்று
புரிந்திருக்கும் கதையொன்று
அதிலே
புலர்ந்திருக்கும் வாழ்வொன்று
சக்தி சக்திதாசன்

Continue reading about புரிந்திருக்கும் கதை ஒன்று »

Category: கவிதை | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

சித்தர்களின் சித்தத்திலே (5)

on July 26th, 2010 by sakthi

 

 
சித்தர்களின் மனநிலை விசித்திரமானது, வியப்பானது, விந்தையானது. அடிப்படையிலே அனைத்துச் சித்தர்களும் இறைவன் என்பவன் அவரவர் மனங்களிலே தான் குடி கொண்டிருக்கிறான் என்பதையே தமது பாடல்களின் மூலம் சுட்டிக்காட்டி வந்துள்ளார்கள்.
 
ஆத்திகவாதிகள், நாத்திகவாதிகள் அனைவருக்கும் பொருந்தக்கூடிய கருத்து இது
 
கருத்து இது. மனமே இறைவன் என்னும் போது ஒவ்வொரு மனிதரும் தமது மனட்சாட்சிக்கு விரோதலில்லாமல் நடக்கும் பட்சத்தில் அவர்களின் வாழ்க்கை பூரணமடைகிறது என்பதையே பொருளாக காட்டி நிற்கிறது.
 
பக்தி, இறைவன், சமயம் என்பன எல்லாம் மக்களை நல்வழிப் படுத்த ஏற்பட்டதே ஒழிய பிரிவினைக்கு [...]

Continue reading about சித்தர்களின் சித்தத்திலே (5) »

Category: இலக்கியத்திடல் | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

உழைப்பில் உதிக்கட்டும் புதிய உலகம்

on July 25th, 2010 by sakthi

 
 
சிந்திடும் வியர்வையில் தோழா
சிதறிடும் எண்ணங்கள் நாளும்
சிந்தித்துப் பார்த்தால் தோழா
சீற்றமே எழுந்திடும் தானாய்
 
எத்தனை காலங்கள் தோழா
இத்தரை மீதினை நீயும்
பொற்தரை ஆக்கிட உழைத்தாய்
தரித்திரம் தானே கண்டாய்
 
பூத்தோரணம் ஆடிடும் மேடையில்
பொய்க் கொள்கைகள் தனையே
பொழிந்திடும் தலைவர்கள்
புரிந்திடுவாரோ உன் சோகம்
 
காலங்கள் எத்தனை மாறினும் உன்
கோலங்கள் மாறவே இல்லையே
ஞாலத்தின் நியாயங்கள் அனைத்தும்
சாலச் சிறந்தவை ஏட்டிலே
 
உருளும் பானையின் ஓசையும்
உடைந்த சட்டியின் வாசமும்
உந்தன் அடுப்பங்கரையிலே
உணரா மனிதரின் கேளிக்கை
 
கல்வியின் பெருமையை உணர்ந்தவர்
கல்விச்சாலையின் வெளியே
காசில் மிதப்பவர் குழந்தைகள்
கசக்கக் கசக்கக் கற்றிடுவார்
 
வறுமையின் நிறமும் சிவப்பா ?
வறியவர் உதிரம் சிவப்பா ?
வாழ்க்கையின் தத்துவம் புரியாமல்
வாடிடும் [...]

Continue reading about உழைப்பில் உதிக்கட்டும் புதிய உலகம் »

Category: கவிதை | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

தாய்மண்ணின் வாசம்

on July 25th, 2010 by sakthi

 
 
தாய்மண்ணின் வாசம் - நெஞ்சில்
தேனாக ஊறும்
தமிழ் தந்த தேசம் எனைத்
தாலாட்டும் நேரம்
 
நினைவுகளைத் தாங்கி - நான்
கனவுகளில் ஏங்கி
தாய்நாட்டை நீங்கித் தவித்தேன்
கவலைகளை வாங்கி
 
கடல் கடந்து வந்தும் - காலம்
கடந்து பல சென்றும்
நிழலாக நெஞ்சில் என்றும்
நிறைந்திருக்கும் பாசம் இன்றும்
 
கலந்திட்ட கனவுகளில் - இன்னும்
கரைந்திட்ட எண்ணங்கள்
கற்றதும் பெற்றதும் எத்தனை ஆயினும்
காலத்தால் அழியாத மண்நேசம்
 
பிரிந்து வந்த பொழுதில் - நான்
சுமந்து வந்த பாரம்
முதிர்ந்து விட்ட பொழுதும்
மிதந்திருக்கும் எப்பொழுதும்
 
உறவு பல கண்டேன் - நானும்
ஊர்கள் பல பார்த்தேன்
உதிரத்தின் பிணைப்பு இன்னும்
உறவாகும் நான் தவழ்ந்த மண்ணில்
 
என் [...]

Continue reading about தாய்மண்ணின் வாசம் »

Category: கவிதை, தாய்மண் | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

காணக் காண கிறங்கும் இதயம்

on July 24th, 2010 by sakthi

 
பாடிப் பாடித்
தேனருந்தும் வண்டும்
கூவிக் கூவி
இசைபாடும் குயிலும்
தேடித் தேடி
அலையுமந்தக் முகிலும்
ஓடி ஓடி
மறையுமந்த நிலவும்
ஆடி ஆடி
அழைக்கின்ற மலரும்
மூசி மூசிப்
பெய்கின்ற பனியும்
பொங்கிப் பொங்கிக்
கொதிக்கின்ற பகலவனும்
வீசி வீசி
அணைக்கின்ற தென்றலும்
முழங்கி முழங்கி
இடிக்கின்ற இடியும்
மின்னி மின்னி
மறைகின்ற மின்னலும்
மெல்ல மெல்ல
விடிகின்ற இரவும்
வெள்ளமெனப்
பொழிகின்ற மழையும்
காணக் காணக்
கிறங்குகின்றதே இதயம்
 
சக்தி சக்திதாசன்
 

Continue reading about காணக் காண கிறங்கும் இதயம் »

Category: கவிதை | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

ஓ ! நானும் கூடக் கடனாளியா ?

on July 24th, 2010 by sakthi

 
வியப்பான கேள்வி, விரும்பத்தகாத விளக்கம், வினவுகின்ற வினாக்கள், விளக்க முடியா விவேகம்.
 
என்ன இது இவன் பாட்டுக்கு அளந்து கொண்டு போகிறானே ! என்ன மூளை கொஞ்சம் பிசகி இவன் வேற லூசுப் பயலாயிட்டானா? என்று எண்ணாதீர்கள்.
 
இன்று காலை இங்கிலாந்துச் செய்திப் பத்திரிகைகளில் வெளிவந்த ஒரு செய்தியின் தாக்கம் தான் இவை.
 
அப்படி என்னதான் செய்தி வந்தது என்கிறீர்களா ?
 
இங்கிலாந்து நாட்டின் கடன் தொகை ஏறத்தாழ 4 ட்ரில்லியன்(Trillion - 1000000000000000000) ஸ்ரேலிங் பவுண்ஸ் ஜ எட்டிப் [...]

Continue reading about ஓ ! நானும் கூடக் கடனாளியா ? »

Category: உள்ளத்தின் ஓசை | No comments yet, be the first »