
சக்தி சக்திதாசனின் தமிழ்ப்பூங்கா
என் மனவானிலே சிறகடிக்கும் எண்ணங்கள்
கம்பராமாயணத்தில் கம்பன் மிகவும் முக்கியமாக கைக்கொண்டது தனது கதாநாயகன் இராமனின் நாடான கோசலை நாட்டின் வளங்களையும், மக்களையும் பற்றிய வர்ணமையும், விபரிப்புமே ஆகும்.
தன்னுடைய கதைக்கு ஏற்ற காட்சிகளை, கருத்துக்களின் ஆழத்தை அழகுறச் சொல்ல வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்தான் கம்பன்.
கம்பனின் ஆக்கத்தை, அவனது படைப்புக்களின் வீரியத்தைப் படித்து வியக்காமல் இருக்க முடியாது.
கம்பனின் விளக்கங்கள், அதை விளக்குவதற்கு அவன் கையாளும் வழி முறைகள் அனைத்துமே அற்புதமானவை.
கம்பனின் கற்பனையில் விரிந்திருந்த இராம ராஜ்ஜியம் எமது சிந்தையை நிறைக்கிறது. தன்னுடைய எண்ணக்கருவறையில் உதிக்கும் [...]
Continue reading about கம்பனோடு நான் கலந்த பொழுதுகள் ……(7) »
அன்னை என்னும்
அன்புத் தெய்வம்
என்னை விட்டுப்
எங்கோ சென்றாலும்
அன்றவள் வதனத்தில்
அன்புடன் பொழிந்த
அன்புப் புன்னகை
அகலாது என்னெஞ்சை விட்டு
தன் பெற்றோரைப் பாவம்
தான் இளைமையில்
இழந்ததினால் தானோ
தாளாத பாசத்தை
தம்மக்கள் மீது
தாயவள் கொண்டாள்
கணமொன்று எம் முகம்
கலங்கக் கண்டாளென்றால்
கலங்கித் துடித்திடும் அவள்
களங்கமிலா அன்பு இதயம்
எத்தனையோ இடர் கண்டு
ஏராளம் துயர் கண்டாய்
அத்தனையும் எமக்காக
அம்மா நீ தாங்கிக் கொண்டாய்
அம்மா நீ போய்விட்டாய்
ஆண்டவனை நாடிட்டாய்
அவனோடு இருந்து கொண்டால்
அன்பு மக்களை காத்திடலாம்
என்றோ நீ உயிரிழந்தாய்
என்னுள்ளமெனும் ஆலயத்தில்
என்றுமே அணையாமல்
எரிகின்றது ஒருவிளக்கு
என் அன்னை உனக்காக
அன்னையர்க்கு தினமென்றால்
ஆயுளிருக்கும் வரை
அனைத்து தினங்களுமேயாகும்
ஆயினும் ஒர் தினத்தில்
அன்னை உன் நினைவுகளை
அழகுபடுத்தி பார்த்திருக்கத் தான்
அன்னையர் [...]
அன்புத் தோழனே !
வருடங்கள் தானாய் ஓடுது
கோஷங்கள் வானைப் பிளக்குது
உழைப்பது நீதான் - ஆனால்
உயர்வது நீயா ?
வறுமையே உந்தன்
வாழ்க்கையின்
தாரக மந்திரமாய்
நீயும்
வானுயர மாளிகைகளைக்
கட்டிக் கொண்டே ……..
குளிரூட்டிய அறையினுள்
சுழலும் நாற்காலியில்
உனக்காக சாசனம் எழுதுகிறார்கள்
உன்னுடைய முதலாளிகள்
நடுத்தரம், மேல்தரம்
கீழ்த்த்ரம் என்றே வர்க்கங்கள்….
கேட்க காதுகளுக்கு இனிமையாய்
மேடைகளிலே பேசும் தலைவர்கள்..
ஆனால்….
கைவண்டி இழுத்த கைகளில்
கறுப்பு மையைப் பூசி
வாக்களித்து
தலைவர்களை இரும்புக் கோட்டைக்கு
தயங்காமல் அனுப்புகிறாய்…..
உன்
வியர்வையைத் தம்மீது
தெளிக்கும் பன்னீராய் அவர்கள்
மாற்றும் யுத்திக்குப் பெயர்தான்
அரசியலாம்…..
பரவாயில்லைத் தோழனே
உன் வியர்வை அவர்களுக்காவது
சந்தனமாகட்டும்
நீ ஓடிக்கொண்டேயிரு
உன் கால்களில் இருக்கும்
செருப்புகள் தேய்ந்து போகும் வரை
ஓடிக் கொண்டேயிரு……
ஏனேனில் உலகம் சுற்றுவதும்
நிற்கப் போவதில்லை
வியாபாரிகள் அரசியல்வாதிகள்
ஆவதும் [...]
எந்த மே ! கொஞ்சம் சொல்லும்
நெஞ்சம் ஏழ்மையில் உறவாடுமே
வியர்வை நெற்றியில் வழிந்தோடுமே
கைகள் தீரமாய் வளைந்தாடுமே
உலகம் அவருழைப்பால் மகிழ்ந்தாடுமே
காலம் அவர்களைப் பந்தாடுமே
அரசியல் அவர்களால் அரங்கேறுமே
உலகம் முழுவதும் அலைபாயுமே
உறுதியில் அவரினம் கல்லாகுமே
பரம்பரை முழுவதும் போராட்டமே
பசிக்களை அவர்களின் வாழ்வோட்டமே
சொத்துக்கள் அவர்களின் முகவாட்டமே - அவர்
காண்பது வாழ்வினில் சோகமூட்டமே
அகிலம் அவருழைப்பால் செழிப்பாகுமே
இல்லாமை அவர்களின் இருப்பாகுமே
மேதினம் என்பது வெறும் கூப்பாடாமே
எத்தினம் அவர் வாழ்வு விடிவாகுமே
உழைப்பவர் தினம் உலகில் மே
உலகினர் விடுமுறை அடைவது மே
உழைப்பவர் கண்ணீர் தீர்க்குமோ மே
கொஞ்சம் சொல்லும் அது எந்த மே
சித்திரைத் திங்களில்
முத்திரை பதித்தொரு
நித்திரை மறந்திடும்
இத்தரை தந்த உறவிது
புத்தகம் படித்தொரு
மெத்தகு இலக்கியம்
வித்தக வழியினில்
சொத்தெனக் கொண்டே
இச்சம் கொள் தமிழ்
மிச்சம் இன்றி என்
கச்சம் பிடிக்கும் ஒரு
அச்சம் கொள்வகை
சுற்றிய உலகினில்
பற்றிய ஆசைகள்
வற்றிய பின்பு எமைத்
தொற்றிடும் ஞானங்கள்
இத்தனை காலமும்
எத்தனை மனதினை
கொட்டின சொற்களால்
கொத்திய நாவிது
பட்டதும் வாழ்க்கையில்
சுட்டதும் அறிந்திடும்
விட்டதும் புரிந்திடும்
வட்டத்தின் வடிவங்கள்
உள்ளமெங்கும் ஆனந்த
வெள்ளம்
பள்ளம் தேடிப் பாயும்
எண்ணம்
என்னுள் விளையும்
அறியா உணர்வுகள்
என்னை எனக்கே
காட்டும் அழகு
முன்னம் ஒருநாள்
தொலைத்த கணங்கள்
இன்றைய வானில்
முழுநிலவாய்
உலகம் எதோ
உருள்வது உருள்வதுதான்
உள்ளே எங்கள்
உதாவக் கொள்கைகள்
மறையும் பொழுதுகள்
எடுத்திடும் உயிர்கள்
விடியும் பொழுதுடன்
சிரிக்கும் மழலைகளாய்
வெட்ட வெட்டத் தழைக்கும்
வாழையாம் எம்மினம்
காணப்போவது ஒரு
கண்ணான காலையை
இழப்புக்களின் வலியைத் தாங்கி
இருப்புக்களை காத்திருந்து
திறப்புக்களை கொண்டே நாமும்
திறப்போம் புதிய உலகின்
கதவுகளை
எதையும் தாங்கிடும் இதயம்
வேண்டும் அன்றே அண்ணா
நன்றாய்ச் சொன்னார்
இதயம் தன்னை விரித்து
அன்பெனும் கம்பளத்தை விரித்து
அனைவரும் தியில இடமளிப்போம்
அதுவே எமக்கு மகிச்சி ஊற்று
நேசத்தின் வாசத்தில்
நெருக்கத்தின் கூடலில்
மிருகமாய் அல்ல
மனிதனாய் வாழத்தான் ஆசை
நெஞ்சுக்கு நீதியை
மறைத்துக் கொண்டே
நாளைய உலகத்தின்
நலன்களை உதறிவாழும்
உருப்படாக் கூட்டத்தில்
ஒருவனாய் அல்ல
மனிதனாய் வாழத்தான் ஆசை
அழுகின்ற முகங்களில்
ஆறுபோல் ஓடுகின்ற
கண்ணிரைத் துடைத்து
வறுமை இல்லா பூமியில்
வாழுகின்றோம் என்று
பாடிக்கொண்டே எனக்கும்
மனிதனாய் வாழத்தான் ஆசை
உள்ளத்தில் நர்த்தனமாடும்
உருவமில்லா உணர்ச்சிகளை
மாலையாக்கி சூடிக்கொண்டு
உண்மைக்குப் புறம்பாக வாழும்
உன்மத்தரில் ஒருவராய் அல்ல
மனிதனாய் வாழ்த்தான் ஆசை
போராடிப் போராடிக் களைத்து
போதுமிந்த ஆசை என்றே
என்னை புறந்தள்ளை வைத்து
பொய்யனாய் வாழச் சொல்லும்
சமூகத்தின் மத்தியில்
ஏனோ இன்று நானும்
ஒருவனாய் வாழுகின்றேன்
ஆயினும்……….
மனதினுள் ஏனோ இன்னும்
மனிதனாய் வாழத்தான் ஆசை …..
அன்பின் நண்பனே !
மெளனமாய் அழுகின்றேன்
மனதுக்குள் துடிக்கின்றேன்
முனகல்கள் வாய்வரை வந்து
முடிந்து போகின்றன ….
காரணம் கேட்காதே தோழா
காரியங்கள் தான் எந்தன்
காரணங்களுக்கு ஏனோ மூடியிட்டு
முழுதாக அடைத்து விடுகின்றன
வேதனைகளின் விளிம்பிலே
உறவுகளின் விசும்பல் சத்தம்
கேட்காத பொழுதில்லை ஆனாலும்
கேள்விகள் மரணித்து விட்டன
பணம் இருக்கும் மனிதரெல்லாம்
பலகாததூரம் சென்று
பலகதை பேசி அங்கே வாழ்க்கை
படகோட்டும் காலம்
நேற்றைய உழைப்பில்
இன்றைய உணவுக்கே பாவம்
அல்லாடிக் கொண்டிருந்தோர் தான்
அவலத்துள் அழிகின்றார் இன்று
அவர்களின் குரல் கேட்காததினால் தான்
மெளனமாய் அழுகின்றேன் நண்பா
குரலற்ற கும்பலின் உரிமையற்ற வாழ்வின் மீது
குதித்துக் கொண்டே இன்று
அரசியல் நடத்துகின்ற கேவலம்
வேண்டாம் நண்பா ! வேண்டாம்
நீ சொல்வதே [...]
என்னுள்ளே பிறந்து
என்னுள்ளே தவழ்ந்து
என்னுள்ளே புதைந்து
என்னோடு மறைந்து
போகின்ற உண்மைகளே !
உங்களுக்கு யார் கொடுத்தார்
ஆயுள் தண்டனை ?
அடைப்பட்டுக் கிடந்து
துடிக்கின்றீர்களே ….
சுதந்திரமாய் வெளியே
நீங்கள் வந்தால்
துவண்டு விடும் பல உள்ளங்கள்
என்னும் பயம் கொண்டுதானோ
நீங்கள் என்னுள்ளே
உறங்குறீர்கள் ?
சுகமாக இருந்த உங்கள்
பாரம் ஏனோ இப்போ
சுமையாகத் தெரிகிறதே !
எனது மனதில் நிலைபெற்றிருக்கும் அன்புக் கவியர்சரின் பிறந்தநாள் நினைவாக அவரது ஆக்கங்கள் சிலவற்றை இங்கே அணிவகுக்கின்றேன்.
ரசிப்பீர்கள் என்பது எனது திடமான நம்பிக்கை.
காசைவிட எது பெரிது?
“தாசியுள வீட்டிலே தவறாத குலமகள்
தான்போய்க் குடியி ருந்தால்
தட்டுகிற கை அங்கு தாசிஎன் றறியுமா
சம்சாரி என்றறியுமா?
நீசரோடு கூடினால் நீதிமான் தன்னையும்
நீசரென் றேயழைப் பார்;
நிகழ்கால நட்பிலே எதிர்காலம் ஒளிவிடும்
நெருங்குமுன அறிய வேண்டும்!
காசு பெரிதல்லநல் நண்பர்பெரி தாமென்று
கருத்தினில் இருத்து வாயே!
கனிவுடைய சிறுகூடற்பட்டியில் வதிகின்ற
கன்னிமலை யரசி துணையே!”
-கவியரசர் க்ண்ணதாசன்-
தன்னுடைய சிறுகூடற்பட்டி மலையரசித் தாயிடம் தனது மனதில் காசைவிச தனது [...]